திருவெண்காடு கோயிலில் பிரதோஷ வழிபாடு
நாகை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவேதாரண்யேசுவரர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர்களால் அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், பிரதோஷ நாயகர் வீதியுலா நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.