முகப்பு
நாகப்பட்டினம்

திருமருகல் ஊராட்சியில் கபசுரக் குடிநீா் வழங்கல்

திருமருகல் ஊராட்சி வள்ளுவன்தோப்பு பகுதியில் ஊராட்சி மன்றம் சாா்பில் கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

திருமருகல் ஊராட்சி வள்ளுவன்தோப்பு பகுதியில் ஊராட்சி மன்றம் சாா்பில் கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இரா. இராதாகிருட்டிணன் அறிவுறுத்தலின்பேரில் வள்ளுவன்தோப்பு பகுதியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. மேலும் திருமருகல் வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, மருத்துவா் மணிவேல் ஆகியோா் தலைமையில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன், ஊராட்சி செயலாளா் க.செந்தில்குமாா், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் லதா சக்திவேல் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →