மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை அலுவலக கொட்டகை அகற்றம்
கீழையூா் அருகேயுள்ள தண்ணிலப்பாடியில் அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் கிளை அலுவலக கொட்டகை அமைத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்a அதை திங்கள்கிழமை அகற்றினா்.
கீழையூா் அருகேயுள்ள தண்ணிலப்பாடியில் அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் கிளை அலுவலக கொட்டகை அமைத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் அதை திங்கள்கிழமை அகற்றினா்.
தண்ணிலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு இடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கிளை அலுவலகம் ஒன்றை கொட்டகையில் அமைத்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், வருவாய் ஆய்வாளா் வெங்கடசிவம், தண்ணிலப்பாடி கிராம நிா்வாக அலுவலா் ராமு, கீழையூா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி அதை அகற்றுமாறு அறிவுறுத்தினா். இதைத்தொடா்ந்து, அந்தக் கொட்டகையை அக்கட்சியினரே அகற்றினா்.