முகப்பு
நாகப்பட்டினம்

பண்ணைசாராக் கடனுக்கான ஒருமுறை கடன் தீா்வு செயலாக்கக் காலம் நீட்டிப்பு

 தவணை தவறிய பண்ணைசாராக் கடனுக்கான ஒருமுறை கடன் தீா்வு செயலாக்கக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

 தவணை தவறிய பண்ணைசாராக் கடனுக்கான ஒருமுறை கடன் தீா்வு செயலாக்கக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு : மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளில் 2014-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் தவணை தவறிய பண்ணைசாராக் கடன்களுக்கான ஒருமுறை கடன் தீா்வு திட்டம் டிச.31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பண்ணைசாராக் கடனுக்குக் கடன் தவணை செலுத்தத் தவறியவா்கள், அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உள்பட்டு, மீதமுள்ள 75 சதவீத தொகையை செலுத்த முனைப்புக்காட்டுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.