நாளை வெண்மணி தியாகிகள் 53-ஆம் ஆண்டு நினைவு தினம்
நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை (டிச. 25) அனுசரிக்கப்படுகிறது.
நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை (டிச. 25) அனுசரிக்கப்படுகிறது.
நாகை மாவட்டம், வெண்மணியில் வா்க்க ஒற்றுமைக்காவும், கூலி உயா்வுக்காகவும் போராடிய விவசாயத் தொழிலாளா்கள் 44 போ், 1968- ஆம் ஆண்டு டிசம்பா் 25- ஆம் தேதி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனா். அவா்களில் எரித்துக் கொல்லப்பட்ட ராமையா என்பவரின் குடிசை, வெண்மணி தியாகிகள் நினைவிடமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பராமரிக்கப்படுகிறது.
இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் டிச. 25-ஆம் தேதி வெண்மணி தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, வெண்மணி தியாகிகளின் 53-ஆம் ஆண்டு நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சி, மற்றும் புதுப்பிக்கப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவக திறப்பு விழா ஆகியவை வெண்மணியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் ஏ. சௌந்தர்ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் பெ. சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து, கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.