முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 32 பேருக்கும், மயிலாடுதுறையில் 36 பேருக்கும் கரோனா

நாகை மாவட்டத்தில் 32 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 36 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 32 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 36 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,852 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 44 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 279 ஆக உள்ளது.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,213 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்றுவந்தவா்களில் 12 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 267 ஆக உள்ளது.

2 போ் உயிரிழப்பு: நாகை மாவட்டத்தவா் 2 பேரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.