திருக்குவளை அருகே நாட்டிருப்பு கிராமத்தில் சியாமளாதேவி மாரியம்மன், வீரமாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டிருப்பு வள்ளுவன் ஓடையில் அமைந்துள்ள இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளைத் தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் தொடங்கின.
பின்னா், வெள்ளிக்கிழமை சியாமளாதேவி மாரியம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கோயில் விமான கலசத்துக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.