முகப்பு
நாகப்பட்டினம்

திருக்கடையூரில் 1,008 சங்காபிஷேகம்

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 நவம்பர், 2024 at 10:46 PM
திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சோமவாரம் முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு ~திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சோமவாரம் முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு
பகிர்:

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய சங்குகளில்  சிவாச்சாரியாா்கள்  வேத மந்திரங்கள்  முழங்க  மேளதாளத்துடன் கோயில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து அபிஷேகம் நடைபெற்றது.   

விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய

பஞ்ச மூா்த்திகள் பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு  வீதி உலா நடைபெற்றது. இதில்  தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

1,008 சங்காபிஷேகம்
முழு கட்டுரையைப் படிக்க →