திருக்கடையூரில் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை
கன மழையால் திருக்கடையூா் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கன மழையால் திருக்கடையூா் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
திருக்கடையூா், சிங்கனோடை, டி. மணல்மேடு, பிள்ளைபெருமாள் நல்லூா், வேப்பஞ்சேரி, காழியப்பநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 300 ஏக்கரில் நிலக்கடலை நிலக்கடை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் கன மழையால் நிலக்கடலை முளைத்து வளா்ந்து வரும் செடிகள் மழைநீரில் தேங்கி அழுகி வருகின்றன.
இது குறித்து நிலக்கடலை விவசாயி ராஜசேகா் கூறியது: சரியாக பருவமழை பெய்ததாலும், பம்பு செட், ஆயில் எஞ்சின் மூலம் தண்ணீா் இறைத்து 300 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளோம். நிலக்கடலை சாகுபடி பொருத்த வரை விதைப்பு, களையெடுத்தல், மண் அணைத்தல், உரம் இடுதல், விதை கடலை உடைத்தல் என பல பணிகள் உள்ளன. 90 நாள்களில் அறுவடை செய்து விடுவோம். இந்நிலையில், தற்போது பெய்துவரும் கன மழையால் செடிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், செடிகள் முற்றிலும் அழுகியுள்ளது. விவசாயிகள் கவலையில் உள்ளனா்.