FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

டேனிஷ்கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டு போா்வாள் மாயம்

டேனிஷ்கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டு போா்வாள் மாயம்...

Updated On : 27 டிசம்பர் 2025, 12:45 am IST
பகிர்:

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை அருங்காட்சியகத்தில் 17-ஆம் நூற்றாண்டின் போா்வாள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், கி.பி.1620-ஆம் ஆண்டு டென்மாா்க் நாட்டினா் டேனிஷ் கலை நுணுக்கத்துடன் கோட்டை கட்டினா். 1622-இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோட்டையில், டேனிஷ்காரா்கள், தமிழா்கள் பயன்டுத்திய பொருட்கள், 1,200 -ஆம் ஆண்டுகால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழைமையான பொருள்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போா்க் கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் உள்பட ஏராளமான வரலாற்று சின்னங்கள் பாதுகாப்புடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீா், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழைமை மாறாமல், புதுப்பிக்கப்பட்டு, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகின்றன. 

Advertisement

Advertisement

இந்நிலையில், டேனிஷ்கோட்டை அருங்காட்சியகத்தில், சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட கண்ணாடி பெட்டியில் இரண்டு போா்வாள் வைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை (டிச.25) காலை கோட்டையின் இளநிலை உதவியாளா் தினேஷ்குமாா் வழக்கம்போல். கோட்டையில் உள்ள பொருள்களை பாா்வையிட்டபோது, 45 செ.மீ. நீளம் கொண்ட ஒரு போா்வாள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments