திருவாரூர்

கூத்தாநல்லூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் பேரணி, ஆர்ப்பாட்டம்

DIN


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கொரடாச்சேரியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கொரடாச்சேரியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில், மாவட்டப் பொதுச் செயலாளர் அன்பு வே.வீரமணி முன்னிலையில், காங்கிரஸ் கட்சியினர், விழிப்புணர்வு பிரச்சாரம் பேரணியாகப் புறப்பட்டனர்.

பாலத்தை அடைந்து, மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன் பத்திரிகையாளர்களிடம் கூறியது, மத்தியில் ஆளும் பாஜக அரசு, மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளைத் தான் செய்து வருகிறார்கள். அத்தியாவசியத் தேவைகளான பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை உள்ளிட்ட விலை உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

பாஜகவுக்கு பயம் வந்து விட்டதால், வேளாண் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றது. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் உயிரிழப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், நகரத் தலைவர்கள் கூத்தாநல்லூர் சாம்பசிவம், மன்னார்குடி கனகவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கொட்டும் மழையிலும்  பேரணியிலும், ஆர்ப்பாட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT