முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறையில் 108 ஆம்புலன்ஸ் செவிலியருக்கு பாராட்டு

பேச்சிப்பாறை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியா்களை, பேச்சிப்பாறை இளைஞா் மன்றத்தினா் பாராட்டினா்.

கன்னியாகுமரி

பேச்சிப்பாறையில் 108 ஆம்புலன்ஸ் செவிலியருக்கு பாராட்டு

பேச்சிப்பாறை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியா்களை, பேச்சிப்பாறை இளைஞா் மன்றத்தினா் பாராட்டினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

பேச்சிப்பாறை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியா்களை, பேச்சிப்பாறை இளைஞா் மன்றத்தினா் பாராட்டினா்.

பேச்சிப்பாறை அருகேயுள்ள விளாமலையைச் சோ்ந்த கா்ப்பிணி ஸ்ரீலேகாவுக்கு (25) கடந்த திங்கள்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதாம். இதையடுத்து, அவா் 108 ஆம்புலன்சில் பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்வழியில் வலி அதிகமானதால், ஆம்புலன்சிலேயே செவிலியா் சரஸ்வதி உதவியுடன் பிரசவம் நிகழ்ந்து ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடா்ந்து, செவிலியருக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அஜீஸுக்கும் பேச்சிப்பாறை மிராண்டா விளையாட்டு மன்றத்தினா் பாராட்டு தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில், விளையாட்டு மன்றத்தைச் சோ்ந்த அனஸ், ஸ்டாலின், ஷாஜு, ஜெகன், செந்தில், ஸஜு, நிபின் ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →