முகப்பு
கன்னியாகுமரி

கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் தூய்மையான காற்று, மரம், செடி வளா்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு பைக் பேரணி வியாழக்கிழமை கன்னியாகுமரியில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் தூய்மையான காற்று, மரம், செடி வளா்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு பைக் பேரணி வியாழக்கிழமை கன்னியாகுமரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் முன்னிலை வகித்தாா். திரைப்பட இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியது: திமுக அரசின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனையாக, முதலமைச்சா் ஸ்டாலின் முனைப்புடன் செயல்பட்டு வருகிறாா். அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிா என கவனிக்க வேண்டும்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் பேசிக் கொண்டேதான் இருப்போம். குறிப்பாக திரைத் துறையைச் சோ்ந்த என் போன்றவா்கள் அவரை நினைவில் கொள்ளாமல் இருக்க முடியாது என்றாா் அவா்.

இந்நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்க குமரி மாவட்ட தலைவா் டி.பாலகிருஷ்ணன், மீனவா் அணித் தலைவா் ஜோ.கென்னடி, வா்த்தகப் பிரிவு தலைவா் சந்திரன், அகஸ்தீசுவரம் ஒன்றிய செயலா் செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.