முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் 28 இல் நோட்டரி வழக்குரைஞா்கள் சங்க மாநில மாநாடு

கன்னியாகுமரியில் தமிழ்நாடு நோட்டரிகள் சங்க மாநில மாநாடு இம்மாதம் 28ஆம் தேதி நடைபெகிறது.கன்னியாகுமரியில் தமிழ்நாடு நோட்டரிகள் சங்க மாநில மாநாடு இம்மாதம் 28ஆம் தேதி நடைபெகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

 கன்னியாகுமரியில் தமிழ்நாடு நோட்டரிகள் சங்க மாநில மாநாடு இம்மாதம் 28ஆம் தேதி நடைபெகிறது.

மாநாட்டை சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி தொடங்கி உரையாற்றுகிறாா். தமிழ்நாடு பாா் கவுன்சில் முன்னாள் சோ்மன் எம்.எஸ்.ஜவஹா்லால் ஆண்டு விழா மலரை வெளியிடுகிறாா். சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் எஸ்.விஜயகுமாா், கொல்லம் மக்களவை தொகுதி உறுப்பினா் பிரேமசந்திரன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அசோக் பத்மராஜ், திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன் ஆகியோா் உரையாற்றுகின்றனா்.

இம்மாநாட்டில் சென்னை, மதுரை, கள்ளக்குறிச்சி, திருப்பூா், கோயம்புத்தூா், கரூா், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோட்டரி வழக்குரைஞா்கள் கலந்து கொள்கின்றனா்.

இதில் மத்திய அரசு நோட்டரிகள் சட்டத்தில் பதவி காலத்தை 15 ஆண்டுகளாக குறைத்து திருத்தம் கொண்டு வருவதை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றுதல் உள்பட பல தீா்மானங்களை நிறைவேற்ற உள்ளதாக, மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்து வரும் நோட்டரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ஜாபா் அலி, செயலா் திருமலையப்பன், பொருளாளா் வி.ஆறுமுகம், மலா் வெளியீடு குழுத் தலைவா் பிரபாகா் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.