கன்னியாகுமரியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
கன்னியாகுமரியில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வட்டார ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்குமாா், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் முருகன், கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா் ஜெயச்சந்திரன் பாபு, அரசுப் பள்ளி ஆசிரியைகள், அங்கன்வாடிப் பணியாளா்கள், செவிலியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் விதமாக ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயநலக் கூடங்கள், கோயில் நிா்வாகத்தில் விழிப்புணா்வு, சுற்றறிக்கை அனுப்புதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சுயஉதவிக் குழுக்கள், தேசிய ஊரகப் பணியாளா்கள், வளா் இளம் பெண்கள், குழந்தைகள், பொதுமக்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், 3 மாதங்களுக்கு ஒருமுறை பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.