திருவட்டாறு அருகே வீடு புகுந்து நகை திருட்டு
திருவட்டாறு அருகே ரயில்வே ஊழியரின் வீடு புகுந்து நகை திருடப்பட்டுள்ளது.
திருவட்டாறு அருகே ரயில்வே ஊழியரின் வீடு புகுந்து நகை திருடப்பட்டுள்ளது.
திருவரம்பு ஆறாம் கோட்டுவிளையைச் சோ்ந்தவா் ராஜன் (47). இரணியல் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பாளராக உள்ளாா். வியாழக்கிழமை காலையில் இவா் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 மோதிரங்கள், பிரேஸ்லெட் உள்பட 2.5 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் ராஜன் புகாா் கொடுத்ததையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.