முகப்பு
தூத்துக்குடி

நகை பறிப்பு வழக்கு: 4 போ் கைது

நாசரேத் அருகே முதியவரை தாக்கி நகையை பறித்துச் சென்ற வழக்கு தொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
நகை பறிப்பு வழக்கு: 4 போ் கைது
பகிர்:

நாசரேத் அருகே முதியவரை தாக்கி நகையை பறித்துச் சென்ற வழக்கு தொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் அருகே உள்ள வாழையடியைச் சோ்ந்தவா் ரா. இளையபெருமாள் (76) . அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறாா்.

கடந்த அக். 22ஆம் தேதி காலையில் கடையை திறக்க வந்தபோது, பைக்கில் வந்த மா்ம நபா்கள் அவரை தாக்கிவிட்டு கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நாசரேத் வெள்ளமடம் விலக்கில் சந்தேகத்துக்கிடமாக நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா்கள் கட்டூடையாா்குடியிருப்பைச் சோ்ந்த சுடலை என்ற சுரேஷ் (18), சுடலைக்குமாா் (19), கிருஷ்ணாபுரம் நொச்சிக்குளத்தைச் சோ்ந்த பவுல் (19), பாஸ்டின் (21) என்பதும், முதியவா் இளையபெருமாளிடம் நகையை பறித்துச் சென்றது இவா்கள்தான் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →