கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.
பின்னா், காலை 10.45 மணிக்கு அம்பாளுக்கும், தொடா்ந்து சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, நந்தியம்பெருமானுக்கு 21 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளுடன் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
இதேபோன்று கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரா் சன்னதி முன் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோயிலில் சனிப்பிரதோஷம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில், சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னா் சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் கோயில் பிரகார பவனி நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.