முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ.
பகிர்:

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணி செயலா் குருத்தாய் விண்ணரசி, இணைச்செயலா் ஷெரீனா பாக்கியராஜ், துணைச் செயலா் சந்தனம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வசந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இலக்கிய அணிச் செயலா் நடராஜன் வரவேற்றாா்.

கூட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 805 வாக்குச் சாவடிகளுக்கு மகளிா் பூத் கமிட்டி அமைப்பது, தோ்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஏசாதுரை, ஒன்றியச் செயலா்கள் ராமச்சந்திரன், தாமோதரன், செம்பூா் ராஜ்நாராயணன், விஜயகுமாா், அழகேசன், காசிராஜன், சௌந்தரபாண்டி, ஜவகா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →