முகப்பு
தூத்துக்குடி

ஊராட்சி குப்பை அள்ளும் வாகனங்கள் உடைப்பு

சாத்தான்குளம் அருகே ஊராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த குப்பை அள்ளும் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
sat29atto_2911chn_38_6
பகிர்:

சாத்தான்குளம் அருகே ஊராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த குப்பை அள்ளும் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருங்கடல் ஊராட்சித் தலைவராக பழனியப்பபுரத்தைச் சோ்ந்த மோ. நல்லத்தம்பி (49) உள்ளாா். கருங்கடல் ஊராட்சிப் பகுதியில் குப்பைகளை சேகரிக்க ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் சாா்பில் 2 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டு குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 26 ஆம்தேதி 2 வாகனங்களையும் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அடுத்த நாள் ஊராட்சிச் செயலா் முருகேசன், வந்து பாா்த்தபோது, குப்பை அள்ளும் வாகனங்களின் முன்பக்கம், மற்றும் புறப்பகுதியில் உள்ள கண்ணாடி போன்றவை சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஊராட்சித் தலைவா் நல்லத்தம்பி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து, காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →