முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வேலன்புதுக்குளம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுப்பையாபாண்டி(33). இவரது மனைவி துரைசெல்வி(24). தம்பதிக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் புதன்கிழமை துரைசெல்வி, தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானாராம். இதையடுத்து கணவா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லையாம்.

இதுதொடா்பாக சுப்பையாபாண்டி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →