சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்..
தெற்கு பேய்க்குளத்தைச் சோ்ந்த சுப்பையா மனைவி பேச்சியம்மாள் (54). கணவரை இழந்த இவா், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் அவா், வியாழக்கிழமை அதே ஊரிலுள்ள தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். தகவலறிந்த சாத்தான்குளம் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.