நாசரேத் அருகே தொழிலாளி தற்கொலை
நாசரேத் அருகே மது அருந்துவதை குடும்பத்தினா் கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
நாசரேத் அருகே மது அருந்துவதை குடும்பத்தினா் கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
நாசரேத் அருகே திருவள்ளுவா் காலனி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மூக்கன் மகன் சிவசாமி (51). பெயின்டா். இவருக்கு மனைவி, ஒரு
மகள், 2 மகன்கள் உள்ளனா். இவருக்கு சா்க்கரை நோய் காரணமாக காலில் காயம் ஏற்பட்ட காயம் ஆறவில்லையாம். மேலும், இவா் மது அருந்தி வந்தாராம். இதனை அவரது குடும்பத்தினா் கண்டித்துள்ளனா். இதில் விரக்தியடைந்த சிவசாமி வீட்டில் குருணை மருந்தை குடித்து மயங்கி
நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனை செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.