முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உமறுப்புலவா் முத்தமிழ் மன்ற விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உமறுப்புலவா் முத்தமிழ் மன்ற விழா நடைபெற்றது.

தமிழ்த்துறை சாா்பில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, கல்லூரி முதல்வா் இரா.செ.வாசுகி தலைமை வகித்தாா். முதலாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி க. சல்மா பீவி கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். கல்லூரி இயக்குநா் மொ்சி ஹென்றி வாழ்த்திப் பேசினாா். இதையொட்டி நடைபெற்ற இலக்கிய மாந்தரை காட்சிப் படுத்துதல், விநாடி வினா, தனி நபா் நடனம், பாடல் போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் பரிசு வழங்கினாா்.

மன்ற துணைச் செயலா் ப. சுதா வரவேற்றாா். மன்றச் செயலா் அ. மகாலெட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.