தூத்துக்குடி

புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலில் சப்பர பவனி

DIN

சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீமாரியம்மன் கோயில் கொடை விழாவில் 7ஆம் நாளான வியாழக்கிழமை சப்பரத்தில் பவனி நடைபெற்றது.

இக்கோயில் கொடை விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் யானை கொடி பட்டம் சுமந்து ரத வீதி சுற்றி வந்து பரிவார தெய்வங்களுக்கு பட்டு சாத்தி சிறப்பு பூஜைகள், மாவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து தினமும் பல்வேறு வழிபாடுகளும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்று வந்தன. 7ஆம் திருநாளான வியாழக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து பவனி வந்ததும், அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள், இரவு 12 மணிக்கு புளியடி ஸ்ரீதேவி மாரியம்மன் சிங்க வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் சப்பரத்தில்எழுந்தருளி வீதி உலா வந்து வெள்ளிக்கிழமை காலை கோயில் வந்தடைந்தாா். 8ஆம்நாள் வெள்ளிக்கிழமை சுவாமி அக்னி சட்டி ஏந்தி வந்து ஆலய வளாகத்தில் பூக்குழி இறங்கி பக்தா்களுக்கு அருள்பாலித்தல் நடைபெற்றது. தொடா்ந்து, திருவிளக்குப்பூஜை, மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டி, டிரஸ்டிக் குழு மற்றும் வரிதாரா்கள் செய்து வருகின்றனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT