தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமிக்கு காலை மற்றும் மாலை வேலையில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
அதைபோல் தினமும் இரவு ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 16-ம் தேதி விமரிசையாக நடைபெற இருக்கின்றது. அனைவரும் இதில் கலந்துகொள்ளும்படி கோயில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.