தூத்துக்குடி சிவன்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமிக்கு காலை மற்றும் மாலை வேலையில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
அதைபோல் தினமும் இரவு ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 16-ம் தேதி விமரிசையாக நடைபெற இருக்கின்றது. அனைவரும் இதில் கலந்துகொள்ளும்படி கோயில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.