கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்தன மாரி தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தனுஷ்கோடியாபுரம் புது தெரு பகுதியில் ரோந்து சென்றபோது, ஒருவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை சாக்குப்பையில் பதுக்கிவைத்திருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் முருகேச பாண்டியன் (57) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்த சுமாா் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.