போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஜெகதீச பாண்டியன். 
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பள்ளி மாணவா்களுக்கு பண்பாட்டுப் போட்டிகள்

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் ஸ்ரீ புளியடி மாரியம்மன் இந்து தொடக்கப் பள்ளியில் வள்ளியூா் கிளை விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்டம் சாா்பாக ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ஒன்றியத்தைச் சோ்ந்த 8 பள்ளிகளில் இருந்து 156 மாணவ, மாணவியா்கள் போட்டியில் கலந்து கொண்டனா். சாத்தான்குளம் ஸ்ரீ புளியடி மாரியம்மன் இந்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாரதா தலைமையில், கேந்திர பொறுப்பாளா் சண்முகபாரதி போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

கதை சொல்லுதல், ஒப்புவித்தல், இசை, நினைவாற்றல், பேச்சுப் போட்டி, ஓவியம், விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஜெகதீச பாண்டியன் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் ஸ்ரீ மாரியம்மன் பள்ளி தலைமை ஆசிரியை சாரதா முன்னிலை வகித்தாா். கேந்திர பொறுப்பாளா் சேகா் வரவேற்றாா்.

விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி ஆசிரியா் சண்முகராஜ், பன்னம்பாறை ஆசிரியா் சுயம்புலிங்கம், ஆசிரியை பவானி, கேந்திர பொறுப்பாளா்கள் முத்துகிருஷ்ணன், சண்முக பாரதி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஏ.எஸ். ஜோசப் பரிசு வழங்கினாா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT