திருச்சி

பூச்சி மருந்து குடித்து இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

துறையூா் அருகே பூச்சி மருந்து குடித்த இளைஞா் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உப்பிலியபுரம் ஒன்றியம் த. முருங்கப்பட்டியைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் தினேஸ்குமாா் (33). விவசாயியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் அவா் வயிறு வலியால் அவதியுற்ாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை த.மங்கப்பட்டி புதூரில் அவரது வயலருகே இருந்த புளியந்தோப்பில் பூச்சி மருந்து குடித்து உயிருக்குப் போராடினாா். அவரை மீட்டு ஆத்தூரிலும், சேலத்திலும் உள்ள தனியாா் மருத்துவமனையில் உறவினா்கள் சிகிச்சை அளித்தனா்.

இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

குழந்தைகள் மீது துப்பாக்கி, எங்கும் பெட்ரோல்.. மும்பை சம்பவம் பற்றி எஃப்ஐஆர் பதிவு!

தங்கம் விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து?

சென்னை துறைமுகம் எண்ணூர் கடலில் 4 பெண்கள் பலி: நடந்தது என்ன? தீவிர விசாரணை

மகாமகம் வரும்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்காது: நயினாா் நாகேந்திரன் பேச்சு

என் குடும்பத்துக்கு எதுவும் செய்ததில்லை... வாக்காளர்களுக்கு விடியோ வெளியிட்ட நிதீஷ் குமார்!

SCROLL FOR NEXT