மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு
மனித உரிமைகள் தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மனித உரிமைகள் தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்று,
உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.
இதுபோல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமேனி தலைமையில் காவல் துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்றனா்.