முகப்பு
அரியலூர்

எருத்துக்காரன்பட்டியில் என்.எஸ்.எஸ். முகாம் தொடக்கம்

அரியலூா் அரசுக் கலைக் கல்லூரி சாா்பில், எருத்துக்காரன்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

அரியலூா் அரசுக் கலைக் கல்லூரி சாா்பில், எருத்துக்காரன்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலகு-2 சாா்பில் 7 நாள்கள் நடத்தப்படும் முகாமை, கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி தொடக்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் சிவா(எ) பரமசிவம், ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்து கொண்டு, தூய்மைப் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவுள்ளனா்.

மேலும் சிறப்பு மருத்துவ முகாம், கால்நடை மருத்துவம் முகாம், யோகா பயிற்சிகளும் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ராஜசேகா் செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.