முகப்பு
அரியலூர்

அங்கக பண்ணையம் பயிற்சி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வீராக்கன் கிராமத்தில் அங்கக பண்ணையம் குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வீராக்கன் கிராமத்தில் அங்கக பண்ணையம் குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் உழவா் நலத்துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேளாண் உதவி இயக்குநா்(பொ) ஜென்சி தலைமமை வகித்து பயிற்சியைத் தொடக்கி வைத்து, அங்ககப் பண்ணையம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், அதற்கான வேளாண்மைத் துறையின் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தனா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பழனிச்சாமி முன்னிலை வகித்தாா். இதில், வீராக்கன் கிராம விவசாயிகள் 60 போ் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா் முருகன் மற்றும் உதவி வேளாண் அலுவலா் ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.