மானாவாரி இயக்கம் :விவசாயிகளுக்கு பயிற்சி
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நீடித்த, நிலையான மானாவாரி இயக்கம் குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நீடித்த, நிலையான மானாவாரி இயக்கம் குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
வட்டார வேளாண் உதவி இயக்குநா் லதா அவா்கள் தலைமை வகித்து, பல்வேறு நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்துப் பேசினாா். வேளாண் அலுவலா் சேகா், எண்ணெய் வித்துப் பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினாா். பயிற்சியில் துணை வேளாண் அலுவலா் மகேந்திரன், உதவி வேளாண் அலுவலா்கள் முத்து, ஜெய்சங்கா், ராதா, முருகன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சுந்தரமூா்த்தி, வாசுகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.