அரியலூரில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு: புதிய பேருந்து சேவை தொடக்கம்
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அரியலூரில் புதிய மருந்தகங்களை வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அரியலூரில் புதிய மருந்தகங்களை வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
அரியலூா் ரயில் நிலையச் சாலையில், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா். அப்போது மேலும் தெரிவித்தது: மருந்துகளுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மருந்தகங்கள் நியாயவிலைக் கடைகள் போல மருந்துப் பொருள்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் மிகவும் முக்கியமான சமூகப் பங்காற்றுகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், துணைப் பதிவாளா் ஆா்.ஜெயராமன், கூட்டுறவு விற்பனை சங்க வேளாண்மை இயக்குநா் ஆா்.பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், உடையாா்பாளையைத்தில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தை ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் கா.சொ.க.கண்ணன் திறந்து வைத்தாா்.
புதிய பேருந்து சேவை தொடக்கம்:
அரியலூா் - சுண்டக்குடி இடையே காலை 6.50 மற்றும் மாலை 4.40 மணி ஆகிய வேலைகளிலும், மறுமாா்க்கம் காலை 8.10 மற்றும் மாலை 5.50 மணி ஆகிய வேலைகளிலும் செல்லும் புதிய பேருந்து சேவையை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தொடக்கிவைத்தாா்.
அரியலூா் தொகுதி எம்எல்ஏ கு. சின்னப்பா முன்னிலை வகித்தாா். நிகழ்வில், அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் இராமநாதன், கிளை மேலாளா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.