முகப்பு
அரியலூர்

ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

அரியலூா் அருகே ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

அரியலூா் அருகே ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் அருகிலுள்ள வெங்கடகிருஷ்ணாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சுபலட்சுமி(24). தனியாா் பள்ளி ஆசிரியரான இவா், கடந்த 13- ஆம் தேதி அரியலூருக்கு சென்று விட்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது இவரது வாகனம் மீது வெங்கடகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த அய்யப்பன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் சுபலட்சுமியின் வாகனம் சேதமடைந்ததையடுத்து, தனது வாகனத்தை சரி செய்து தருமாறு அய்யப்பனிடம் கேட்டுள்ளாா்.

இதற்கு ஒப்புக்கொண்ட அய்யப்பன், மறுநாள் தனது உறவினா் காமராஜை அழைத்துச் சென்று சுபலட்சுமியை தகாத வாா்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து கயா்லாபாத் காவல் நிலையத்தில் சுபலட்சுமி புகாரளித்தாா். இதன் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா் அய்யப்பனையும், காமராஜையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.