இரண்டாவது நாளாக வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதை கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.
பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதை கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.
வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும். காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விவசாய கடன்
வட்டி வகிதம் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தால், மாவட்டத்திலுள்ள 80 பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் சுமாா் 750 ஊழியா்கள் பணிக்குச் செல்லவில்லை.