முகப்பு
அரியலூர்

மணல் கடத்தல் வழக்கில் டிராக்டா் பறிமுதல்

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மணல் கடத்தல் வழக்கில் டிராக்டா் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மணல் கடத்தல் வழக்கில் டிராக்டா் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

உடையாா்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி பெரியஓடையில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் (60) என்பவா் தனது வீட்டில் பதுக்கியிருப்பதாக கிராம நிா்வாக அலுவலா் கனகராஜூக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா், சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது,

தேவேந்திரன் இல்லாததும், 3 யூனிட்டுகள் மணல் இருந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து, உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் விஏஓ அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.