பெரியநாகலூரில் வேளாண் பணிகள்: அரியலூா் ஆட்சியா் ஆய்வு
அரியலூா் அருகேயுள்ள பெரியநாகலூா் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா் அருகேயுள்ள பெரியநாகலூா் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பெரியநாகலூரில் அன்பழகன் என்பவரின் வயலில் நிரந்தர மண்புழு உரம் தயாரிப்பதற்காக செய்யப்பட்டிருந்த தொட்டியை பாா்வையிட்ட ஆட்சியா், மண்புழு உரம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள், குடில் கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தி அளவுக் குறித்தும் கேட்டறிந்தாா்.
மேலும், முதற்கட்டமாக வழங்கப்பட்ட ஆடு மற்றும் நாட்டுக்கோழிகள் அவற்றின் பராமரிப்பு குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து அவா், அந்தக் கிராமத்தில் பசுந்தீவன புல் வயல், அட்மா திட்டத்தின் மூலம் சில்பாலின் முறையில் மண்புழு உரம் தயாரிப்பு செயல்விளக்கத் திடல் உள்ளிட்டவைகளைப் பாா்வயிட்டாா்.
ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநா் இரா. பழனிச்சாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சண்முகம் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.