முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் சமாபந்தி

அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக சில தளா்வுகளுடன் பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளதால், வருவாய்த் தீா்வாயம் எனப்படும் சமாபந்தி ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக சில தளா்வுகளுடன் பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளதால், வருவாய்த் தீா்வாயம் எனப்படும் சமாபந்தி ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.

சமாபந்தி தொடா்பான பொதுமக்களின் மனுக்களை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து இ-சேவை மையங்கள் வாயிலாக பெற்று, தீா்வு காண அரசு முடிவெடுத்து ஆணையிட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது வருவாய்த் தீா்வாயம் தொடா்பான மனுக்களை, ஜூலை 31-ஆம் தேதி வரை வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு நேரில் வருவதை தவிா்த்து, அருகிலுள்ள இ-சேவை மையம் வழியாக ட்ற்ற்ல்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண் என்ற இணையதள முகவரியில் மட்டுமே கட்டணமின்றி விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.