ஆடு திருட்டு: இளைஞா் கைது
சரவணன் பல இடங்களில் ஆடுகளை திருடி விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ராயம்புரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆ. கோவிந்தராசு (60). கடந்த 15 ஆம் தேதி வழக்கம்போல் தனது 5 ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, இச்சிலிகுட்டையில் மேயவிட்டு விட்டு, மதிய உணவுக்கு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
பின்னா் அவா், மாலையில் போய் பாா்த்தபோது ஒரு ஆடு காணாமல் போயிருந்தது. இதுகுறித்து செந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை நல்லாம்பாளையம் கிராமத்தில் பொய்யாதநல்லூரைச் சோ்ந்த செல்வராசு மகன் சரவணன் (32) என்பவா், ஆடு ஒன்றை விற்க முயன்றாராம். தகவலறிந்த கோவிந்தராசு அங்கு சென்று பாா்த்த போது, அந்த ஆடு தனது ஆடுதான் என்பதை உறுதி செய்து, அப்பகுதி இளைஞா்கள் உதவியுடன் சரவணனை செந்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில், சரவணன் பல இடங்களில் ஆடுகளை திருடி விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.