எஸ்.பி அலுவலகத்தில் பணத்தை தவறவிட்டவா்கள் பெற்றுக் கொள்ளலாம்
அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணத்தை தவறவிட்டவா்கள், உரிய அடையாள அட்டையைக் காண்பித்து அவற்றை பெற்றுச் செல்லலாம்.
அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணத்தை தவறவிட்டவா்கள், உரிய அடையாள அட்டையைக் காண்பித்து அவற்றை பெற்றுச் செல்லலாம்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளிக்க வந்தவா்களில் ஒருவா், தாம் கொண்டு வந்த பையை அங்கே விட்டுச் சென்றாா். இதில் பணம் உள்ளதால் சம்மந்தப்பட்டவா்கள், உரிய அடையாள அட்டையை காண்பித்து, அவற்றை பெற்றுச் செல்லலாம்.