முகப்பு
அரியலூர்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த வெற்றியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த வெற்றியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் தெரிவிக்கையில், மாவட்டத்தில் 120 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம், தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் கால்நடை மருத்துவ வசதி கிடைக்காத இடங்களுக்கு கால்நடைகளின் நலனைக் காத்திடும் வகையில் இலவசமாக நடத்தப்படவுள்ளதால் ஏழை, எளிய கால்நடை வளா்ப்போா் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக அவா், கால்நடை வளா்ப்பவா்களுக்கு தாது உப்புக் கலவையும், சிறந்த கிடேரிக்கன்று வளா்த்த 7 பேருக்கு பரிசுகளையும் வழங்கினாா். இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் ஹமீதுஅலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.