பூச்சி மருந்தை குடித்த இளம்பெண் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், குவாகம் அருகே பூச்சி மருந்தை குடித்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், குவாகம் அருகே பூச்சி மருந்தை குடித்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். மணப்பத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி அபிராமி. தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், விரக்தியில் இருந்த அபிராமி கடந்த 4 ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து, புதுச்சேரியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் குவாகம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.