பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தாா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தாா்.
ஜயங்கொண்டத்தை அடுத்த தேவாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் தொடக்கி வைத்து, மாணவா்களுக்கு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ரா. சிவக்குமாா், மருத்துவக் குழுவினா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.