காவல் நிலையத்தில் மனு விசாரணை, குறைதீா்க்கும் முகாம்
அரியலூா் காவல் நிலையத்தில், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான விசாரணை, குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் காவல் நிலையத்தில், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான விசாரணை, குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா். முகாமில், அரியலூா் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்திருந்த, கணவா் - மனைவி பிரச்னை, நிலப் பிரச்னை, வரதட்சணை பிரச்னை உள்ளிட்ட 200 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீா்வு கண்டனா்.
அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன் மற்றும் கீழப்பழுவூா், திருமானூா், அரியலூா்,வெங்கனூா், தூத்தூா் உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் கலந்து கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.