சிறுமியிடம் வல்லுறவு இளைஞருக்கு ஆயுள் சிறை
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
உடையாா்பாளையம் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் (எ) செந்தமிழ்ச்செல்வன் (31). பரோட்டா மாஸ்டரான இவா், கடந்த 4.7.2021 அன்று தனது உறவினா் மகளான 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி செந்தமிழ்ச்செல்வனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்து உத்தரவிட்டாா். இதையடுத்து செந்தமிழ்ச்செல்வன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.