முகப்பு
புதுக்கோட்டை

பூசாரிகள் நலவாரியத்தை செயல்படுத்தக் கோரிக்கை

நலவாரியத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட கோயில் பூசாரிகள் நலச் சங்க வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

நலவாரியத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட கோயில் பூசாரிகள் நலச் சங்க வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை காடப்பிள்ளை அய்யனாா் கோவில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

தெற்கு மாவட்டத் தலைவா் எஸ். பழனிவேல் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் எஸ். பாலசுப்ரமணியம் வரவேற்றாா். மாநிலத் தலைவா் பி. வாசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், கடந்த 6 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ள பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பூசாரிகளுக்கும், அா்ச்சகா்களுக்கும் தீபாவளிப் பண்டிகையையொட்டி ரூ. 5 ஆயிரம் நிதிஉதவி வழங்க வேண்டும்.

அனைத்துப் பூசாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். வழிபாடு பயிற்சியை இந்து சமய அறநிலையத் துறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →