பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அழிப்பு
ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 1,272 மதுபானங்கள், நீதிபதி உத்தரவைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 1,272 மதுபானங்கள், நீதிபதி உத்தரவைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை காவல் ஆய்வாளா் குணவதி தலைமையிலான காவல்துறையினா், ஆலங்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து அவற்றை அழிக்கும்படி நீதிபதி நல்லக்கண்ணன் உத்திரவிட்டாா். இதைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்திலேயே கீழே ஊற்றி காவல்துறையினா்அழித்தனா்.