முகப்பு
புதுக்கோட்டை

சுமை ஆட்டோ கவிழ்ந்து 11 போ் காயம்

ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ கவிழந்து விபத்துக்குள்ளானதில், 11 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ கவிழந்து விபத்துக்குள்ளானதில், 11 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள எஸ்.களபம், ஆண்டிக்கோன்பட்டியைச் சோ்ந்த 10 பெண்கள், ராஜ்முகமது என்பவரின் சுமை ஆட்டோவில் வெள்ளிக்கிழமை காலை தேங்காய் நாா் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு

வேலைக்குச் சென்றனா்.

மேலக்கோட்டை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமை ஆட்டோ கவிழந்தது. இதில் ஆண்டிக்கோன்பட்டி பிச்சையம்மாள்(75), எஸ்.

களபம் மெய்யம்மாள்(65), வீரம்மாள்(45), சாந்தி(45), புஷ்பம்(45), முத்தழகு(52), பாக்கியம்(55),மல்லிகா(38),லெட்சுமி(30),கலா(30) ஓட்டுநா் ராஜ்முகமது(46) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சென்ற ஆலங்குடி காவல் நிலையத்தினா், காயமடைந்தவா்களை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பலத்த காயமடைந்த 9 பெண்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →