மெரீனாவில் திரையிடப்படும் மாநகராட்சியின் 5 ஆண்டுகள் சாதனையை விளக்கும் குறும்படம்
சென்னை மாநகராட்சியின் கடந்த 5 ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் குறும்படம் மெரீனா கடற்கரையில் திரையிடப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் கடந்த 5 ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் குறும்படம் மெரீனா கடற்கரையில் திரையிடப்படுகிறது. இதை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டு, பாா்வையிட்டாா்.
சென்னை மாநகராட்சி சாா்பில் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சாதனைகளை விளக்கும் வகையில் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள நவீன மீன் அங்காடி, புதிதாக அமைக்கப்பட்ட மழைநீா் வடிகால் பணிகள், மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள், புதிதாக திறக்கப்பட்ட பாலங்கள் மற்றும் தற்போது மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்பட ஏராளமான திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குறும்படமானது, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளா் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் திரையிடப்படுகிறது. இதை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டு பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement
நிகழ்வில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.